இது தொடர்பாக கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே இன்று (ஏப்.,6) கூறுகையில், கொரோனாவை கட்டுக்குள் வைக்க கோவா அரசு மத்திய அரசுடன் இணைந்து போராடி வருகிறது. நோய் தொற்றை பரிசோதிப்பதற்கு தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. நோயைச் சோதிக்க 2000 துரிதக் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனைவை எதிர்த்து போராட நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். சுமார் 2000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் உள்ள மோல்பயோடெக்ஸுடன் என்ற நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத்துறை 5 மருத்துவ இயந்திரங்கள் மற்றும் 2,000 'ட்ரூனாட்' விரைவு சோதனைக் கருவிகளை வாங்கப்பட்டது. இது பி.சி.ஆர் அடிப்படையிலான தொற்று கண்டறியும் கருவியாகும். மாஸ்க்குகள் தயாரிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.